ஓலா நிறுவனம் கால் டாக்சி ஓட்டுநரின் கழுத்தை அறுத்து கொலை செய்த 3 பேர் கைது

by Editor / 28-06-2022 02:20:57pm
ஓலா நிறுவனம் கால் டாக்சி ஓட்டுநரின் கழுத்தை அறுத்து கொலை செய்த 3 பேர் கைது

செங்கல்பட்டில் ஓலா கால் டாக்ஸி ஓட்டுனர் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஒட்டியம்பாக்கம்  பகுதியைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவரான அர்ஜுனை சோழிங்கநல்லூரில் இருந்து ஓலா நிறுவனம் மூலம் புக் செய்த கும்பல் நள்ளிரவில் செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியில் வைத்து அர்ஜுனின் கழுத்தில் கத்தியால் அறுத்து  சாலையில் தள்ளிவிட்டு காருடன் தப்பி சென்றது. இவ்வழக்கு தொடர்பாக சிசிடிவி பதிவுகளை செல்போன் தரவுகளை சேகரித்து ஆய்வு செய்த போலீசார் பெரம்பலுர் மாவட்டம் கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு மூர்த்தி பிரசாந்த் இசக்கி முத்து ஆகிய இளைஞர்களை கைது செய்தது விசாரணையில் காரை திருடி செல்வதற்காக கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

 

Tags :

Share via