ஒரே அடியில் பிரிந்த உயிர்

by Staff / 04-05-2024 05:12:45pm
ஒரே அடியில் பிரிந்த உயிர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் காச்சிபௌலியில் உள்ள அஞ்சயா நகரில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டாக ஹோட்டல் உரிமையாளர் ஸ்ரீனிவாஸ் (54) என்பவருக்கும், ஹோட்டல் அருகே வசிக்கும் நபருக்கும் சாலை தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று ஹோட்டல் அருகே வசிக்கும் நபர், ஸ்ரீனிவாஸை ஹோட்டலுக்குள் புகுந்து இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via