அதிகாலையில் கோர விபத்து - 12 பேர் பலி

by Staff / 15-04-2023 11:37:44am
அதிகாலையில் கோர விபத்து - 12 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பையிலிருந்து 40 பயணிகளுடன் புனே நோக்கி தனியார் பேருந்து சென்றது. இந்த பேருந்து அதிகாலை 4 மணியளவில், பழைய மும்பை - புனே நெடுஞ்சாலையில் உள்ள ஷிங்ரோபா கோயில் அருகே சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 25 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via