2500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் 

by Reporter / 08-07-2021 04:53:58pm
2500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் 

 

மாவட்ட செய்திகள் 

திருச்சி ஏர்போர்ட் அருகே 2500 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்த லாரியை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர் கடத்தல் லாரி பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்து ஏற்ப ஏர்போர்ட் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது .

நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஆனந்த் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மீன்பிடிக்கும் போது கடலில் தவறி விழுந்து காணாமல்போன ஆனந்தை இந்திய கடலோர காவல்படை தேடி வருகின்றனர்.
---
பல்வேறு வழக்குகளில் கைதாகி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 35 கைதிகளை கொரோனோ தொற்று மற்றும் இடம் பற்றாக்குறை காரணமாக திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் மற்றும் அரியலூர் எஸ்.பி. ஆகியோர் உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டனர்.
--
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கொரோனா தொற்று பரிசோதனையை பொதுமக்கள் ஆர்வத்துடன் செய்துகொண்டனர்.
-தொகுப்பு  - செ.சிவக்குமார்.திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்.

 

Tags :

Share via