விஷம் கொடுத்த தந்தை - குழந்தை பலி
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார் (30) - சத்யா தம்பதி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் கோபித்துக்கொண்ட சத்யா, முதல் மகளை மட்டும் அழைத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் மனமுடைந்த சிவகுமார், 14 மாத குழந்தைக்கும், 2ஆவது மகளுக்கும் உணவில் கலந்து விஷம் கொடுத்து, அவரும் குடித்துள்ளார். பின்னர் இரண்டு குழந்தைகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், கைக்குழந்தை இறந்தது. தற்போது சிவகுமார், அவரது 2ஆவது மகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுகுறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :