கீழக்கரை ஜல்லிகட்டுப்போட்டி.. 500 காளைகள் பங்கேற்பு

by Staff / 23-01-2024 05:00:18pm
கீழக்கரை ஜல்லிகட்டுப்போட்டி.. 500 காளைகள் பங்கேற்பு

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ஆன்லைன் வாயிலாக அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் போட்டியில் கலந்துகொள்ள 9,312 காளைகளும் 3669 மாடு பிடி வீரர்களும் பதிவு செய்திருந்ததாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via