இலங்கையை வாட்டும் பொருளாதார நெருக்கடி

by Staff / 21-03-2022 03:43:00pm
இலங்கையை வாட்டும் பொருளாதார நெருக்கடி

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் எரிபொருள் வாங்க வெவ்வேறு இடங்களில் வரிசையில் நின்று முதியவர்கள் 2 பேர் சுருண்டு விழுந்து இறந்தனர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் கடந்த சில வாரங்களாக வாகன எரிபொருள் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

பெட்ரோல் வாங்கவும்  கேராசியின் வாங்கவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் எரிபொருள் வாங்க சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நின்று தாக கூறப்படும் 70 வயது மற்றும் 72 வயது முதியவர் 2 பேர் இறந்ததாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via