வான்வழி பயிற்சி சீன எல்லை அருகே நடைபெற்றது

by Staff / 26-03-2022 01:55:32pm
 வான்வழி பயிற்சி சீன எல்லை அருகே நடைபெற்றது

சீனாவுடனான வடக்கு எல்லை மற்றும் நேபாளம், பூடான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளின் எல்லைகளுடன் தொடர்புள்ள பகுதியாக உள்ள  மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இந்திய ராணுவத்தின் வான்வழி விரைவு குழுக்கள் பங்கேற்ற  இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இதில் 600க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டு, வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ விமானங்களில் இருந்து பாராசூட் மூலம் கீழே உள்ள இலக்குகளை குறி வைத்து குதிக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

எதிரிகளின் இலக்குகளை கண்காணிப்பது உள்பட பல்வேறு முக்கிய நோக்கங்களை கொண்டதாக இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
இந்த பிராந்தியத்தில் கடந்த மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக நடைபெற்ற பயிற்சி இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via