பாலியல் சீண்டல்களால் பரிதாபமாகும் பள்ளி மாணவியர்களின் வாழ்க்கை-தொடரும் அரக்கர்கள் வேட்டை

by Editor / 27-03-2022 08:33:33am
பாலியல் சீண்டல்களால் பரிதாபமாகும்  பள்ளி மாணவியர்களின் வாழ்க்கை-தொடரும் அரக்கர்கள் வேட்டை

தமிழகத்தில் சமீப காலங்களாக பள்ளி மாணவிகள் மீது காமக்கொடூரர்களின் கொடூரம் நிறைந்த  பார்வை திரும்பியுள்ளது.சிறுமிகள் என்றும் பார்க்காமல் அவர்களை சிதைக்கும் செயல்கள் சமீபகாலமாக அரங்கேறிவருகிறது.இளம் பெண்களுக்கும்  பாலியல் அத்துமீறல்களில் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகளான 13 வயது சிறுமிக்கு இதே கொடூரம் நடந்துள்ளது.

இந்த மாணவியின் தாயும்,குடிகார தந்தையுமான  லாரி ஓட்டுநர் மனைவி வேறு ஒருவருடன் சென்று விட்ட நிலையில் குடிபோதைக்கு அடிமையான லாரி ஓட்டுநரான தந்தையும் வீட்டிற்கு சரியாக வராததால் 15 வயது உடைய சகோதரனுடைய பராமரிப்பில் அரசுப் பள்ளியில்யில் பயிலும் 7 ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது மாணவியான அவரை சகோதரன் அவனது கூட்டாளியான சந்தோஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட ரவுடி கும்பலுக்கும் மோதல் இந்த நிலையில் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது பயந்து வீட்டை காலி செய்து வேறு இடத்துக்கு சென்று விட்ட நிலையில் அந்த பெண்ணின் சகோதரர் பெரியப்பா வீட்டுக்கு சென்று தங்கியிருந்துள்ளார் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதியன்று வீட்டில் அந்த மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார் அப்போது அவரது சகோதரரை தாக்குவதற்காக வீடு தேடி வந்த 5 பேர் கொண்ட கும்பல் மாணவி தனியாக இருப்பதை பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை ஈடுபட்டதாக கூறப்படுகிறது .மீண்டும் பிப்ரவரி 8ஆம் தேதி போதையில் வீடு புகுந்து அந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் சிறுமியிடம் அத்துமீறி அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது ஆண்டிலிருந்து தொடர்ந்து மாணவியிடம் கடுமையான அத்துமீறல்களை  தொடர்ந்து இந்த கும்பல் செய்து வந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த சிறுமி அம்பத்தூர் அனைத்து காவல் நிலையத்தில் புகார் செய்தார் காவல்துறையினரின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்கு குறித்து சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அந்த 12 வயது மாணவியை ஐந்து பேர் கொண்ட போதை பழக்கம் கொண்ட கும்பல் அத்து மீறல்களில் ஈடுபட்டது உறுதியானதும் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இந்த போதை கும்பலை காயிதே செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த போதை கும்பல் பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆய்வாளர் ஜோதிலட்சுமி தலைமையில் தனிப்படை போலீசார் செங்குன்றம் பாலகணேசன் நகரைச் சார்ந்த லட்சுமணன், அப்துல்கலாம், பாபு, நாரவாரிகுப்பம் அக்பர், கௌதம், 5 பேரை செங்குன்றம் பகுதிகளில் கைது செய்தனர் இவர்கள் மீது போகாசோ உள்ளிட்ட 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை கொடுத்த போதை கும்பலை விரைவாக கைது செய்த தனிப்படை போலீசாரை ஆவடி  காவல் ஆணையர் பாராட்டினார், தாய் தகப்பன் இல்லாத சிறுமியை  இரண்டு மாதங்களாக மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்ட போதை கும்பல் கைது செய்யப்பட்டது மக்கள் மத்தியில் காவல்துறையினர்க்கு பாராட்டுக்கள்  
குவிந்த வண்ணமுள்ளது.உள்ளது.

 

Tags : பாலியல் சீண்டல்களால் பரிதாபமாகும் பள்ளி மாணவியர்களின் வாழ்க்கை-தொடரும் அரக்கர்கள் வேட்டை

Share via