உக்ரைனில் இருந்து 50 இந்தியர்கள் வரை எஞ்சி இருப்பதாக தகவல்

by Staff / 01-04-2022 04:22:42pm
உக்ரைனில் இருந்து 50 இந்தியர்கள் வரை எஞ்சி இருப்பதாக தகவல்

உக்ரைனில் 40 முதல் 50 இந்தியர்கள் எஞ்சி இருப்பதாகவும் அதில் சிலர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்தார்.

மாநிலங்களில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி உக்ரைனில் இருந்து ஏறத்தாழ இந்தியர்கள் 22 ஆயிரத்து 500 பேர் மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.

இன்னும் 40 முதல் 50 இந்தியர்களுக்கு இருப்பதாகவும் அதில் சிலர்  நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர்களை மீட்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர்  கொரோனா காலத்தில் வந்தே  பாரத் திட்டம் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 2 கோடியே 97 லட்சம் பேர் விமானம் மூலம் மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via