24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் : பழனிசாமி கோரிக்கை

by Staff / 06-05-2024 04:44:50pm
24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் : பழனிசாமி கோரிக்கை

விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தடையின்றி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிநீர் வாரியம் மின்சார மோட்டார்களை 20 மணி நேரம் இயக்கி குடிநீரை மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் சேகரித்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் எங்கள் ஆட்சி காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டனர். ஆனால் திமுக ஆட்சியில் குடிநீர் திட்டங்களுக்கான மின் மோட்டார்கள் இயங்குவது 20 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். குடிநீர் தேவை கூடுதலாக தேவைப்படும் இந்த கோடையில் மின் மோட்டார்களை 22 மணி நேரமாக இயக்கி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via