கேரளா பாலக்காடு பகுதியில் 144 தடை உத்தரவு அமல்

by Staff / 18-04-2022 12:51:58pm
கேரளா பாலக்காடு பகுதியில் 144 தடை உத்தரவு அமல்

கடந்த 15 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் கொழிஞ்சாம்பாறை அருகே பள்ளிவாசலுக்கு சென்று திரும்பிய எஸ். டி. பி. ஐ. கட்சியை சேர்ந்த சுபைர் என்பவரை, அவரது தந்தை கண் முன்னே மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர். 

மேலும் இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் 2 மணியில் பாலக்காடு நகரில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சீனிவாசனை, அவர் வேலை செய்து வந்த கடைக்குள் புகுந்து ஆறு நபர் சேர்ந்து, வெட்டி கொலை செய்து தப்பி ஓடினர்.

தொடர்ந்து அரசியல் கொலைக் குற்றங்கள் நடந்து வருவதால், பாலக்காடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via