காஷ்மீர் பிரச்சனையை தீர்க்காமல் இந்தியாவுடன் அமைதியான சூழல் சாத்தியமில்லை.

by Staff / 18-04-2022 12:41:19pm
காஷ்மீர் பிரச்சனையை தீர்க்காமல் இந்தியாவுடன் அமைதியான சூழல் சாத்தியமில்லை.

பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவுடன் அமைதிக்கான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார் தற்போது இரு தரப்பில் உள்ள காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக பதவியேற்ற ஷேபாஸ் ஷெரீப் க்கு  பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. பிரதமராக பதவியேற்ற நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை தீர்க்காமல் இந்தியாவுடன் அமைதியான சூழல் சாத்தியமில்லை என்று கூறியிருந்தார்.

 

Tags :

Share via