நாற்பத்தி எட்டு லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம் ஐநாவுக்கான அகதிகள் அமைப்பு தகவல்

by Staff / 18-04-2022 12:36:30pm
நாற்பத்தி எட்டு லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம் ஐநாவுக்கான அகதிகள் அமைப்பு தகவல்

உக்ரைனில் இருந்து இதுவரை நாற்பத்தி எட்டு லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியே இருப்பதாக ஐநா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ போர் தொடுத்த முதல் தற்போது வரை நாற்பத்தி எட்டு லட்சம் 69 ஆயிரம் பேரு உக்ரேனில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் அண்டை நாடான போலந்தில் தான் குடியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உக்ரேன் நாட்டு மக்கள் தொகை 44.3 மில்லியனாக இருந்த இருந்ததாகவும் அதில் தற்போது 10 சதவீதம் பேர் அகதிகளாக வெளியேறி விட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Tags :

Share via