கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்

by Staff / 03-11-2022 04:47:41pm
கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்

மதுரை அருகே கீழக்குயில்குடியைச் சேர்ந்த காசிநாதனின் ( 41)மகனிடம் விளாச்சேரி வேளாளர் தெருவை சேர்ந்த சோமு மகன் பாரத் ( 21) என்பவர் கடன் வாங்கி இருந்தார்.இதனை திருப்பி தரவில்லை.
எனவே காசிநாதனின் மகன் பணத்தை கேட்டார்.அப்போது அவரை 3 பேர் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தந்தையிடம் தெரிவித்தார்.இதன் அடிப்படையில் காசிநாதன், பாரத்தின் தந்தை சோமுவிடம் இது பற்றி தெரிவித்து உள்ளார்.இந்த நிலையில் காசிநாதன் நேற்று இரவு விளாச்சேரி, ஆதி சிவன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றது.இதுகுறித்து காசிநாதன், திருநகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து பாரத், திருநகர் அண்ணா தெரு, நாகார்ஜுன் ( 27) ஆகிய 2 பேரைகைது செய்தனர்.இதில் தப்பி ஓடிய மொட்டமலை நிலாபிரியன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via