திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரி மனு: இன்று விசாரணை

by Staff / 31-01-2024 02:15:48pm
திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரி மனு: இன்று விசாரணை

திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ். அல்லி முன்பாக இன்று விசாரணைக்கு வரவுள்ளது. வீட்டில் பணிபுரிந்த பணி்ப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை நீ்லாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர். இருவரும் வரும் பிப். 9 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ். அல்லி முன்பாக இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

 

Tags :

Share via