ஷாங்காயில் கொரோனா தொற்று வேகமெடுத்து உள்ளது.

by Staff / 05-04-2022 02:45:09pm
ஷாங்காயில் கொரோனா தொற்று வேகமெடுத்து உள்ளது.

சீனாவின் மிகப்பெரிய நகரும், அந்த நாட்டின் பொருளாதார தலைநகருமான ஷாங்காயில் கொரோனா தொற்று வேகமெடுத்து உள்ளது.

 நாடு முழுவதும் நேற்று முன்தினம் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இதில் சுமார் 9 ஆயிரம் பேர் ஷாங்காய்வாசிகள் ஆவர்.

இதில் ராணுவம், கடற்படையை சேர்ந்த டாக்டர்கள் சுமார் 2 ஆயிரம் பேரும் அடங்குவர். இதன் மூலம் தொற்று கட்டுப்பாட்டு பணிகளில் ராணுவத்தையும் சீனா களமிறக்கி உள்ளது. 

ஷாங்காயில் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து 2 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அத்துடன் நகரவாசிகள் 2.5 கோடி பேருக்கு பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தொற்று உறுதி செய்யப்படுவோருக்கு அறிகுறிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via