பா.ஜ.க. தேசிய செயற்குழு ஜே.பி.நட்டா தலைமையில் இன்று கூடுகிறது

by Editor / 07-11-2021 01:51:55pm
பா.ஜ.க. தேசிய செயற்குழு ஜே.பி.நட்டா தலைமையில் இன்று கூடுகிறது

 

சமீபத்தில் நடைபெற்ற 29 எம்.எல்.ஏ. தொகுதிகள் மற்றும் 3 எம்.பி. தொகுதிகளில் ஏற்பட்ட இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய, டெல்லியில் இன்று பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர்ஜே.பி.நட்டா தலைமையில், இன்று காலை அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க, டெல்லியில் இருக்கும் பா.ஜ.க. நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லிக்கு வெளியே இருக்கும் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், காணொளி வாயிலாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்தும், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும், இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

மேலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

 

Tags :

Share via