தூத்துக்குடியில் 4ஆம் புத்தகத் திருவிழா: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.

by Editor / 21-04-2023 11:52:41pm
தூத்துக்குடியில் 4ஆம் புத்தகத் திருவிழா: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் 4வது புத்தகத்திருவிழா இன்று தொடங்கியது. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார்.  விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார், சார் ஆட்சியர் கௌரவ் குமார், மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சங்கர், தாசில்தார் செல்வகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் வாசிப்புப் பழக்கம் பற்றி பல்வேறு தலைப்புகளில் மக்களிடையே தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள இருக்கிறார்கள். இந்த புத்தக திருவிழாவில் ஏறத்தாழ 110 புத்தக பதிப்பகங்களில் இருந்து புத்தகங்களை கொண்டு வந்து கண்காட்சியாக வைக்க இருக்கிறார்கள். மேலும், வருகிற 28ம் தேதி மண் சார்ந்த கலைஞர்கள் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொள்ளும் நெய்தல் கலை நிகழ்ச்சிகள் தொடங்க இருக்கிறது.

தூத்துக்குடியில் 4ஆம் புத்தகத் திருவிழா: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
 

Tags :

Share via