சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் தற்கொலை- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

by Editor / 22-04-2023 07:30:02am
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் தற்கொலை- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

மகாராஷ்டிரமாநிலத்தை சேர்ந்த மாணவர் கேதார் சுரேஷ் சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக்., 2ஆம் ஆண்டு படித்துவந்தார். ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே மகாராஷ்டிரா மாநில மாணவன் கடந்த பிப்ரவரியில் தற்கொலை செய்துகொண்டநிலையில் அன்றையதினம் கர்நாடகா மாநில மாணவன்  தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த மூன்று மாதங்களில் 4ஆவது முறையாக ஐஐடி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களுக்கு தற்கொலை தீர்வல்ல என்பது குறித்து கவுன்சிலிங் வழங்க அரசு விழிப்புணர்வு முகாம்களை நடத்தவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via