ஒண்டிவீரன்,பூலித்தேவன்  நிகழ்ச்சியை முன்னிட்டு  144 தடையுத்தரவுஆட்சித் தலைவர் அறிவிப்பு.

by Editor / 18-08-2023 11:42:04am
 ஒண்டிவீரன்,பூலித்தேவன்  நிகழ்ச்சியை முன்னிட்டு  144 தடையுத்தரவுஆட்சித் தலைவர் அறிவிப்பு.

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் 20.08.2023 அன்று
நடைபெறும் ஒண்டிவீரன் 252-வது வீரவணக்க நிகழ்ச்சி மற்றும் 01.09.2023 அன்று
நெல்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் பூலித்தேவன் 308-வது பிறந்தநாள்
நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை
செலுத்த உள்ளுர், தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மற்றும் பிற
மாவட்டத்தில் இருந்தும் வருகைத்தரும் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை
சார்ந்தவர்கள், தென்காசி மாவட்டம் முழுமைக்கும் 18.08.2023 பிற்பகல் 6.00 மணி முதல்
21.08.2023 முற்பகல்  10.00 மணிவரை மற்றும் 30.08.2023 பிற்பகல்  6.00 மணி முதல்
02.09.2023 முற்பகல் 10.00 மணிவரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144 (1)
மற்றும் (2) தடையுத்தரவு அமுலில் இருக்கும். இந்நேர்வில். அனைவரும் கூட்டமாக
செல்லாமல் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு
அளிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்  .துரை.இரவிச்சந்திரன் 
தெரிவித்துள்ளார்.

 

Tags :   144 தடையுத்தரவுஆட்சித் தலைவர் அறிவிப்பு.

Share via