செந்தில் பாலாஜி விவகாரம்: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ED

by Staff / 29-04-2024 12:29:52pm
செந்தில் பாலாஜி விவகாரம்: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ED

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, செந்தில் பாலாஜி பல மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். அவர் பலமுறை ஜாமின் கோரி மனு அளித்திருந்த போதிலும், ஜாமீன் கிடைக்கவில்லை. அமலாக்கத்துறை வேண்டுமென்றே பதில் மனு தாக்கல் செய்ய காலம் தாழ்த்தி வருவதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றஞ்சாட்டி வந்தது. இந்த நிலையில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று(ஏப்.29) மன்னிப்புக் கோரியது.

 

Tags :

Share via