அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2 ஆயிரம் காவலர்கள் கவனமுடன் பாதுகாப்புபணியில் ஈடுபட ஆணையர் அறிவுரை.

by Editor / 14-01-2024 10:29:02pm
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2 ஆயிரம் காவலர்கள் கவனமுடன் பாதுகாப்புபணியில் ஈடுபட ஆணையர் அறிவுரை.

ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்படும் காவலர்களுக்கு மதுரை காவல் ஆணையர் லோகநாதன் பிறப்பித்துள்ள உத்தரவு.வருமாறு:

15 ஆம் தேதி  மதுரை மாநகர் அவனியாபுரத்தில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு  பணியில்  சுமார் 2000 காவலர்கள் பணி அமர்த்தப்பட இருக்கின்றனர்.பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் குறித்த நேரத்தில் அவர்களுக்கு  ஒதுக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பு பணிக்கு ஆஜராக வேண்டும் எனவும் பணியில்  விழிப்புணர்வுடன்  இருக்க வேண்டும்,மற்றும் .ஜல்லிக்கட்டு காளைகளுடன் வாகனங்களில் வருபவர்களையும் மாடு பிடிக்க வருபவர்களையும் சோதனை செய்து எவ்வித தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் ஏதும் கொண்டு வருவதை கண்காணித்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.
 காவலர்கள் அனைவரும் உடல் பாதுகாப்பு கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.என்று அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

 

Tags : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2 ஆயிரம் காவலர்கள் கவனமுடன் பாதுகாப்புபணியில் ஈடுபட ஆணையர் அறிவுரை.

Share via