டிவி சத்தம் அதிகமாக வைத்ததாக முதியவர் மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது
கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்த முதியவர் மீது பாத்துரும் கழுவும் அமிலம் வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார். சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்ற 70 வயது முதியவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் டிவி சத்தத்தை அதிகமாக வைத்து பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகில் வசிக்கும் வீரமணி என்பவர் முதியவரின் வீட்டுக்குள் புகுந்து டிவி சத்தம் குறைக்க கூறியுள்ளார். இதுகுறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த வீரமணி பாத்திரம் கழுவும் அமிலத்தை எடுத்து முதியவர் முகத்தின் மீது வீசியுள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில் வீரமணியை போலீசார் கைது செய்தனர்.
Tags :