புதுச்சேரி இ.எஸ்.ஐ மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் நூதன திருட்டு.....
விவேகானந்தா நகர் விரிவாக்க பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஸ்ரீனிவாசன், புதுச்சேரி இஎஸ்ஐ மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 12 ஆம் தேதி அன்று குறுஞ்செய்தியில் வங்கிக்கணக்கில் பான் எண்ணை இணைப்பதற்கான லீங்க் கொடுக்கப்பட்டிருந்தது. உடனே அவரும் அந்த லிங்கிற்கு சென்று பார்வையிட்டபோது, ஓடிபி ஒன்று வந்துள்ளது. அதனை அவர் அந்த லிங்கில் சென்று செலுத்திய பிறகு வங்கி கணக்கில் இருந்த பணம் குறையத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது வங்கிக் கணக்கு இருப்பை, சரிபார்த்த போது ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாய் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.
Tags :