இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்றார்
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்றுக்கொண்டார் ஏற்கனவே தளபதியாக இருந்த மனோஜ் முகுந்தன் நரவனேனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் தன் பொறுப்புகளை ஒப்படைத்தார் பொறியாளர் பிரிவிலிருந்து இராணுவத்தளபதி பதவிக்கு வந்த முதல் ஆள் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். பூனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்ற இவர் 1982ம் ஆண்டு ராணுவப் பொறியாளர் பிரிவில் பணியில் சேர்ந்தார் தலைவர் பதவிக்கு வரும் முன் ராணுவத்தின் கிழக்கு பிரிவுக்கு தலைவராக இருந்தார்
Tags :