ஆதித்யா எல்-1: உயரம் மீண்டும் அதிகரிப்பு

by Staff / 05-09-2023 10:51:04am
ஆதித்யா எல்-1: உயரம் மீண்டும் அதிகரிப்பு

சூரியனை ஆராய்வதற்கு இந்தியாவின் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் 2 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது 2வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. "விண்கலத்தை அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை செப்டம்பர் 10 ஆம் தேதி மேற்கொள்ளப்படும். இதனை அடுத்து விண்கலம் நல்ல முறையில் செயல்படுகிறது" என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via