மளிகைக்கடை ஷட்டரை உடைத்து உணவு பொருட்களை சாப்பிட்ட யானைகள்....
கோவை மாவட்டம் பெரிய தடாகம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 7 காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அதிகாலை, தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நட மாடியது.
அங்கிருந்த மளிகை கடைக்குள் சென்ற, 3 யானைகள் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த அரிசி பருப்பு உள்ளிட்டவற்றை சாப்பிட்டுள்ளன. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
Tags :