பிலிப்பைன்சில் நேற்று திடீரென நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நேற்று மதியம் 01.51 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:41 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், டாவோ ஓரியண்டல் மாகாணத்தின் தர்கோனா நகரத்திலிருந்து தென்கிழக்கே 136 கிமீ தொலைவில் 96 கிமீ ஆழத்தில் தாக்கியதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags :