பெற்ற மகளை தந்தையே பீர் பாட்டிலால் குத்திய சம்பவம்

by Staff / 14-05-2022 03:00:44pm
பெற்ற மகளை தந்தையே பீர் பாட்டிலால் குத்திய சம்பவம்


மதுரை சோழவந்தான் அருகே கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞரை காதலித்ததால் பெற்ற மகளையே பீர் பாட்டிலால் குத்திய தந்தை  கைது செய்யப்பட்டார். முள்ளி பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முரளியின் 11ம் வகுப்பு  படிக்கும் மகள் ராஜேஸ்வரி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த முரளி மகளை கண்டித்தும் அவர் கேட்கவில்லை என்று  கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த முரளி பெற்ற மகள் என்றும் பாராமல் மதுபோதையில் ராஜஜேஸ்வரியை  பீர் பாட்டிலால் குத்தியுள்ளார்.இதில் அவர் படுகாயம் அடைந்தார் சிறுமியை மிட்ட  அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுப்பி வைத்த நிலையில் அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில்  உள்ளார் என்றும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

 

Tags :

Share via