சட்டவிரோத லாட்டரி மூலம் 62 லட்சத்தை இழந்த விசைத்தறி உரிமையாளர் தற்கொலை

by Staff / 14-05-2022 02:53:09pm
சட்டவிரோத லாட்டரி மூலம் 62 லட்சத்தை இழந்த விசைத்தறி உரிமையாளர் தற்கொலை

ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் அருகே லாட்டரி மூலம் 62 லட்சம் ரூபாயை இழந்து விசைத்தறி உரிமையாளர் வீடியோ வெளியிட்ட பின் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எல்லப்பாளையம் முல்லை நகரைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளரான ராதாகிருஷ்ணன் சட்டவிரோத லாட்டரி விற்பனை மூலம் அதிக பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இவரது மரணத்திற்கு கருங்கல் பாளையம் 33வது வார்டு கவுன்சிலரின் கணவர் செந்தில் தான் காரணம் என்று அவரிடம் இருந்து 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக பெற்று தனது குடும்பத்தினரிடம் வழங்க வேண்டும் எனவும் அவர் வீடியோவில் கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via