கரண்ட் கட் தலைக்கேறிய காமம் மூதாட்டியை கற்பழித்த கொடூரன் கைது.

by Editor / 18-05-2022 09:02:10pm
கரண்ட் கட் தலைக்கேறிய காமம் மூதாட்டியை கற்பழித்த கொடூரன் கைது.

திருப்பத்தூர் மாவட்டம், பாச்சல் அடுத்த பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்த சரோஜா (75) என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார்.இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் முருகன் (45) என்பவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு கரன்ட் கட் ஆன நேரத்தில் மூதாட்டியை வீடு புகுந்து கற்பழித்து உள்ளார். மூதாட்டி  சரோஜா திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சரோஜா அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : The tyrant who raped the lust-cutting old grandmother was arrested.

Share via