ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் இரு பிரிவாக மோதல்

by Staff / 20-05-2022 11:37:42am
ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் இரு பிரிவாக மோதல்

மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் 2 தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால் அடிதடி வாக்குவாதம் காட்சி ஏற்பட்டது. மதுரையில் ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில் அருகில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இங்கு பணிபுரியும் இரண்டு ரயில்வே தொழிற் சங்கங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக வாய்த்தகராறு முற்றி ரயில்வே ஊழியர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ரயில்வே தொழிற் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத் துறை அதிகாரியை சந்திக்கும் போது தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் அமைப்பைச் சேர்ந்த கோட்ட செயலாளர் முகமது ரபீக் என்பவர் சங்க நிர்வாகிகளுடன் தெற்கு ரயில்வே முகத்தில் சேர்ந்த தலைவர் நாகேந்திரன் அதிகாரிகள் அறையை முன்பாகவே கடுமையாகப் பேசி தாக்கியதால் இருதரப்பு ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை ஏற்பட்டதாகவும் மூத்த நிர்வாகிகள் தலையிட்டால் சிறிது நேரத்தில் தடுக்கப்பட்ட பிரச்சினை முடிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.

 

Tags :

Share via