இன்னும் 20 நாட்களில் பெட்ரோல் டீசல் விலை குறைக்க வேண்டும் அண்ணாமலை கெடு

by Staff / 31-05-2022 05:08:17pm
இன்னும் 20 நாட்களில் பெட்ரோல் டீசல் விலை குறைக்க வேண்டும் அண்ணாமலை கெடு


இன்னும் 20 நாட்களில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் மாவட்டம்தோறும் அறவழியில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு சென்னை எழும்பூரில் பாஜக கூடினர். ஆனால் அவர்களே முன்னேறி செல்ல விடாமல் போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாவட்டம் தோறும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

 

Tags :

Share via