பிறந்தநாளை இறந்தநாள் ஆக்கிய குடிகார கூட்டாளி

by Staff / 31-05-2022 05:21:14pm
பிறந்தநாளை இறந்தநாள் ஆக்கிய குடிகார கூட்டாளி

பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நண்பர்களுக்கு மதுவிருந்து அளித்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அமலாதி ஏரிக்குள்  அரங்கேறி இருக்கின்றது. பிறந்தநாள் இறந்தநாள் ஆக்கிய ஓசி கூட்டாளிகள் போலீசில் சிக்கினர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ராமகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து 21 வயதான இவர் எலக்ட்ரிகல் பணி செய்து வந்தார். பிறந்தநாளையொட்டி தனது நண்பர்களுக்கு அமலாதி  ஏரிக்குள் மது விருந்து வைத்தார். மாரிமுத்து தமது நண்பர்கள் ராமமூர்த்தி லோகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய பின்னர் மது அருந்தியுள்ளார். அப்போது திடீரென  நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ராமமூர்த்தி பேபி மாரிமுத்துவை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மாரி முத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமமூர்த்தியும் லோகேஸ்வரன் சேர்ந்து மாரிமுத்துவை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோழவரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் மாரிமுத்துவின் நண்பர்கள் ராமமூர்த்தி லோகேஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய பர்த்டே பேபி மாரிமுத்து பிறந்தநாளில் மாரிமுத்து இறந்து போனா  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

Tags :

Share via