தேர் சாய்ந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு தமிழக உழவர் மற்றும் விவசாய துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஹள்றி கிராமத்தில் தேர்திருவிழாவில், தேர் சாய்ந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு தமிழக உழவர் மற்றும் விவசாய துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்து தலா ரூ.50,000 நிவாரண உதவியை வழங்கினார்.
Tags :