அனைத்து தர மக்களும் சமமானவர்களே சென்னை உயர்நீதிமன்றம்

by Staff / 14-06-2022 12:38:46pm
அனைத்து தர மக்களும் சமமானவர்களே சென்னை உயர்நீதிமன்றம்

அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்றும் எந்த ஒரு சமூகத்தையும் பற்றி தவறாக பேசுவது ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பட்டியாழினத்தவர்க்கள்  குறித்து அவதூறாகப் பேசிய புகாரில் நடிகை மீரா மிதுன் அவரது நண்பர் சாம் அபிஷேக் கடந்த ஆகஸ்டில் கைதாகி இருந்த நிலையில் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். அதன்  விசாரணையில் மீராமிதுன் பேசுவதற்கு சாம் உறுதுணையாக இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது .மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததை ஏற்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

 

Tags :

Share via