தொழிலாளி உள்பட 2 பேர் திடீர் சாவு

by Editor / 15-06-2022 11:14:35am
தொழிலாளி உள்பட 2 பேர் திடீர் சாவு

தச்சநல்லூர் அருகே உள்ள அழகனேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(39). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று பேட்டை கோடீஸ்வரன்நகர் பகுதியில் ஒரு வீட்டில் காங்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறிய அவர் மயங்கி விழுந்தார். உடனே சக தொழிலாளர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆனந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பேட்டை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் முகமது சுல்தான்(25). இவர் அங்குள்ள சிக்கன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டில் படுத்து தூங்கியவர் வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை.

அவரது உறவினர்கள் அவரை எழுப்ப முயன்றபோது அவர் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via