இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து டீக்கடை சேதம் ஒருவர் படுகாயம்
திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அருகே இருசக்கர வாகனத்தில் புத்தூர் வழியாக ஐயப்பன்தாங்கலை சேர்ந்த வினோத் குமார் உள்ளிட்ட மூன்று நபர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்பொழுது நான்குவழிச் சாலை சந்திப்பு பகுதியில் சரிந்து கொண்டிருந்த வாகனத்தில் இருந்து ஒரு பொருள் திடீரென தவறி விழுந்துள்ளது.பயங்கர சத்தத்துடன் அந்த பொருள் வெடித்து சிதறி அருகிலிருந்த டீக்கடைகளில் கண்ணாடி நொறுங்கியது ஒரு பைக்கில் சென்ற ஒரு நபரும் படுகாயம் அடைந்தார். போலீசாருக்கு தகவல் கிடைக்கவே விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூன்று நபர்களில் ஐயப்பன்தாங்கல் சேர்ந்த வினோத் குமார் என்பவர் நாட்டு வெடிகுண்டு பையில் மறைத்து கொண்டு சென்றதும் ஏற்கனவே இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இவர்கள் நாட்டு வெடிகுண்டு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது எதற்காக என்பது குறித்தும் ஏதேனும் சதித் திட்டங்கள் நிறைவேற்ற கொண்டு சென்றார்கள் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :