சென்னை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து குளிர்வித்ததால் மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் அக்னி நட்சத்திர வெயில் போன்று கடுமையாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில்நேற்று மாலைமுதல் வானத்தில் கருமேகம் சூழ்ந்தது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
வெப்ப சலனம் காரணமாக தீடீரென புதுவண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர், இராயபுரம் மணலி, மணலி புதுநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. போன்று சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பாடி,கொரட்டூர், திருமுல்லைவாயல், ஆவடி,பட்டாபிராம் திருநின்றவூர் முத்தாபுதுபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.மேலும் திருவள்ளூர் திருத்தணி ஊத்துக்கோட்டை ஆரம்பாக்கம் கும்மிடிப்பூண்டி பொன்னேரி பழவேற்காடு மீஞ்சூர் செங்குன்றம் தாமரைபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
Tags : People are happy with the heavy rains and thunderstorms in Chennai