யானைப் பசிக்கு சோளப்பொறி போல உள்ளது ஜெயக்குமார்,

by Staff / 27-04-2024 02:36:16pm
யானைப் பசிக்கு சோளப்பொறி போல உள்ளது ஜெயக்குமார்,

சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இன்று நிவாரண நிதியை ஒதுக்கிய நிலையில் நிதி குறைவாக உள்ளதாக தமிழக தலைவர்கள் பலர் சாடியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே விமர்சனம் வைத்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “யானைப் பசிக்கு சோளப்பொறி போல மத்திய அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது. வடக்கு ஒரு நீதி தெற்கு ஒரு நீதியா?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

 

Tags :

Share via