சென்னையில் மதிமுக மா.செ.க்கள் கூட்டம்-துரை வைகோவுக்கு கட்சியில் பதவி

by Editor / 20-10-2021 11:00:16am
சென்னையில் மதிமுக மா.செ.க்கள் கூட்டம்-துரை வைகோவுக்கு கட்சியில் பதவி

 வைகோ, என் மகன் அரசியலுக்கு வருவதை நான் துளியும் விரும்பவில்லை. ஆனால் தொண்டர்கள்தான் இயக்கம்.. அவர்கள் விரும்பும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றார். இதையடுத்து மதிமுகவின் பல்வேறு மாவட்ட அமைப்புகளில் துரை வையாபுரி என்கிற துரை வைகோவுக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னையில் இன்று மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க சில நாட்களுக்கு முன்னர் வைகோவும் துரை வைகோவும் சென்னை விமான நிலையம் வருகை தந்தனர். அப்போது இருவருக்கும் ஆளுயர மாலை அணிவித்து வீரவாள் பரிசளிக்கப்பட்டது. இதனிடையே சென்னையில் இன்று நடைபெறும் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடர்பான மதிமுக சுவரொட்டிகளில் வெற்றி திருமகனே துரை வைகோ என்ற அடைமொழியுடன் பிரமாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இன்றைய கூட்டத்தில் துரை வைகோவுக்கு மதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பதவி வழங்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

Tags :

Share via