சுரண்டை அருகே மின்னல் தாக்கி 14வயது சிறுவன் உயிரிழப்பு.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே குலையநேரி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சிவசக்தி (வயது 14) பங்களா சுரண்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் மாலை தனது சித்தப்பாவுடன் சேர்ந்து பங்களா சுரண்டையில் நடைபெற்ற கட்டடப் பணியை பார்வையிட சென்ற பொழுது பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் சிவசக்தி மீது தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் விரைந்து வந்து சிவசக்தி உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Tags : சுரண்டை அருகே மின்னல் தாக்கி 14வயது சிறுவன் உயிரிழப்பு.