பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதாக திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை

by Editor / 21-06-2022 04:20:52pm
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதாக திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை

திருச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் மகள் இறந்த துக்கம் தாளாமல் தாயும் தற்கொலைக்கு முயன்றார். கலிங்கம் உடையான் பட்டியைச் சேர்ந்த மோகன் தம்பதியின் மகள் அனுஷ்யா பொதுத் தேர்வில் 600க்கு 383 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மதிப்பெண் குறைவாக இருப்பதாக கூறி அனுராதா அனுசியா திட்டியதாக கூறப்படுகிறது இதனால் மனமுடைந்த மாணவி நேற்று இரவு அனைவரும் உறங்கிய நேரம் பார்த்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்த துக்கம் தாளாமல் அனுராதாவும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

Tags :

Share via