சென்னை புளியந்தோப்பில் ரவுடி வெட்டி கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பல் போலீஸ் வலைவீச்சு

by Editor / 29-06-2022 03:05:45pm
சென்னை புளியந்தோப்பில் ரவுடி வெட்டி கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பல் போலீஸ் வலைவீச்சு

புளியந்தோப்பில் ரவுடி வெட்டி கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடிவருகின்றனர். புளியந்தோப்பை சேர்ந்த சுரேஷ் சுரேஷ் என்கின்ற ஆதி சுரேஷ் மீது பத்து வருடங்களுக்கு முன்பு சில வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மாலை 7 மணி அளவில் புளியந்தோப்பு ஹை ரோடு 1வது தெரு வழியாக சுரேஷ் வீட்டிற்கு சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories