சாலைகளில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து

by Editor / 07-07-2022 03:39:36pm
சாலைகளில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. குன்றத்தூரில் இருந்து வேலூரை நோக்கி தனியார் நிறுவனத்திற்கு பணியாளர்களை ஏற்றிச்செல்லும் குளிர்சாதனப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஸ்ரீபெரும்புதூரில் அருகே பேருந்தின் முன்பக்கம் புகை வந்துள்ளது சுதாகரித்து ஓட்டுனர் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கிய நிலையில் பேருந்து தீப்பற்றி எரிந்தது மேலும் அதிக அளவில் கரும்புகை வெளியேறியது தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் இருப்பினும் பேருந்தின் முன்பக்கம் முழுவதும் எரிந்து விட்டது.

 

Tags :

Share via