குஜராத்தில் கன மழை வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள் மீட்பு பணிகள் தீவிரம்

by Editor / 11-07-2022 01:13:43pm
குஜராத்தில் கன மழை வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள் மீட்பு பணிகள் தீவிரம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் அம்மாநிலத்தின் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.வால்சாத் நவசரி தாபி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.சோட்டா உதய்புரில் உள்ள  நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்து இதனிடையே சோட்டா உதய்பூர் உள்ள பாலத்தின் ஒரு பகுதி கனமழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது  தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via