பெட்ரோல், டீசல் விலை ரூ.5 மற்றும் ரூ.3 குறைக்கப்படுவதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

by Editor / 14-07-2022 11:09:44pm
பெட்ரோல், டீசல் விலை ரூ.5 மற்றும் ரூ.3 குறைக்கப்படுவதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

மஹாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல் விலை முறையே ரூ.5 மற்றும் ரூ.3 குறைக்கப்படுவதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். இதனால் அரசுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும் எனக்கூறினார். இதற்கான முடிவு மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

விலை குறைப்பு காரணமாக பெட்ரோல் விலை, மும்பையில் ரூ.111.35 ஆகவும், புனேயில் ரூ.105.88 ஆகவும், தானேயில் ரூ.106.49 ஆகவும் விற்பனையாகிறது. டீசல் விலை மும்பையில் ரூ.94.28 ஆகவும், புனேயில் ரூ.92.37 ஆகவும், தானேயில்ரூ. 94.42 ஆகவும் விற்பனையாகிறது.

 

Tags : Chief Minister Eknath Shinde said that petrol and diesel prices will be reduced by Rs.5 and Rs.3 respectively

Share via