முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 44 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்-ஓபிஎஸ்

by Editor / 15-07-2022 04:43:52pm
முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 44 பேர்  அதிமுகவிலிருந்து நீக்கம்-ஓபிஎஸ்

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் இரண்டு அணிகளாக அதிமுக உடைந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆன அணி பொதுக்குழுக்கூட்டம் போட்டு ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை நீக்கியது.இதன் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினரான ஓபிஎஸ் மகன்கள் உள்ளிட்ட  18 பேரை எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கிய நிலையில், இதற்கு பதிலடியாக இபிஎஸ் உள்பட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்துள்ளார். அந்த 22 பேரை நீக்கிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் இன்று அனுப்பி வைத்துள்ளார்.இந்த நிலையில்  இன்று முன்னாள் அமைச்சர்கள்  சி.விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், பெஞ்சமின் உள்ளிட்ட 44 பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சிக்கு களங்கமும்,அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags : 44 people including former ministers expelled from AIADMK-OPS

Share via