பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 8 பேர் பலி

by Editor / 17-02-2024 01:57:31pm
பட்டாசு ஆலையில்  வெடி விபத்து.. 8 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன் பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர். பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர். இந்த வெடிவிபத்தில் 4 பேர் காயமடைந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலைக்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு ஆலை விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.

 

Tags :

Share via